மலேசியாவில் நாம் இருபது இலட்சம் பேர்தான் இருக்கிறோம். சீனர்கள் நம்மை விட நான்கு மடங்கு அதிகமாக இருந்தாலும் ஏதாவது பிரச்னை வந்தால் எல்லோரும் ஒன்றுபட்டு விடுவார்கள் – அவர்கள் ஆளும் கட்சியிலும் இருந்தாலும் எதிர்க்கட்சியில் இருந்தாலும் தங்கள் சமுதாயதிக்கோ, தாய் மொழிக்கோ, கோவில்களுக்கோ ஏதாவது பாதகம் ஏற்பட்டால் அனைவரும் ஒற்றுமையாக செயல்படுவர். நம் சமுதாயம் மட்டும் இதில் விதிவிலக்காக இருக்கிறது.
அனைவருக்கும் நன்றாக தெரியும் – ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு - ஒற்றுமை இல்லாமல் பிரிந்து வாழ்ந்தால் நமக்கு அழிவே வரும். நமது இனத்தின் மேலும், தாய்மொழியின் மேலும் அதிக பற்றுதல் வையுங்கள்!
No comments:
Post a Comment