தாய் தந்தையர் என்றுமே நமது வாழ்க்கையில் முதன்மை நிலையில் வைத்து போற்றக்கூடியவர்கள் ஆவர். பெற்றோர்களிடமிருந்துதான் அன்பு உருவாக்கப்படுகிறது. எனவே ஒரு மனிதன் வாழ்க்கையில் எந்த நிலைக்குச் சென்றாலும் அவர்களை மறந்துவிடக்கூடாது.

Friday, January 27, 2012

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு


மலேசியாவில் நாம் இருபது இலட்சம் பேர்தான் இருக்கிறோம். சீனர்கள் நம்மை விட நான்கு மடங்கு அதிகமாக இருந்தாலும் ஏதாவது பிரச்னை வந்தால் எல்லோரும் ஒன்றுபட்டு விடுவார்கள் – அவர்கள் ஆளும் கட்சியிலும் இருந்தாலும் எதிர்க்கட்சியில் இருந்தாலும் தங்கள் சமுதாயதிக்கோ, தாய் மொழிக்கோ, கோவில்களுக்கோ ஏதாவது பாதகம் ஏற்பட்டால் அனைவரும் ஒற்றுமையாக செயல்படுவர். நம் சமுதாயம் மட்டும் இதில் விதிவிலக்காக இருக்கிறது.
அனைவருக்கும் நன்றாக தெரியும் – ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு -  ஒற்றுமை இல்லாமல் பிரிந்து வாழ்ந்தால் நமக்கு அழிவே வரும். நமது இனத்தின் மேலும், தாய்மொழியின் மேலும் அதிக பற்றுதல் வையுங்கள்!

Saturday, January 14, 2012

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு பொங்கல் நல்வாழ்த்துகள்

இனிய தமிழ்புத்தாண்டு் & பொங்கல் நல்வாழ்த்துகள் 
நித்திரையில் இருக்கும் தமிழா!
சித்திரை அல்ல உனக்குத் தமிழ்ப் புத்தாண்டு 
அண்டிப் பிழைக்க வந்த ஆரியக் கூட்டம் காட்டியதே 
அறிவுக்கு ஒவ்வாத அறுபது ஆண்டுகள் 
தரணி ஆண்ட தமிழர்க்கு தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு...!
 *அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகள்*



Sunday, January 30, 2011

You can do it

The biggest obstacle standing between you and anything you want, is your lack of belief that you can have it. Once you truly believe it is possible, once you can see yourself doing it or being it or having it, the rest is just details. With belief, plus the commitment to follow through and do whatever it takes, anything can be yours.

What is it that you truly want to do? You can do it. Realize that you are as capable as any person. See yourself doing it. Touch it. Hear it. Taste it. Walk inside of it. Drive around in it. Believe in it and believe that it is yours.
Everything you need to get there is available to you, when you believe and when you commit to getting there. Know that you can do it. Nothing can hold you back once you have belief and commitment. You will find a way.
You can. Do it.
By:Ralph Marston

ரஜினியின் மனதில் தோன்றிய ஓவியம்....! ரஜினி – கமலின் நட்பின் நினைவுச் சின்னம்


கமலுக்கு விஜய்டிவி நடத்திய பாராட்டு விழாவில், கமலைப் பாராட்டி ரஜினி பேசிய நெகிழ்வான நிகழ்வை யாரும் இத்தனை சீக்கிரம் மறந்திருக்க முடியாது. திரைத் துறையில் கமல் 50 ஆண்டுகள் நிறைவு செய்ததைக் கௌரவித்த பாராட்டு விழா அது. தமிழ்த் திரையுலகமே திரண்டு வந்து ‘கலைத்தாயின் தவப் புதல்வன்’ என்று கமலை உச்சி மோந்த அந்த விழாவில் மேடையேறினார் ரஜினி.
இருவருக்குமான நட்பின் ஆழத்தை மீண்டும் நிரூபித்த விழா. ‘நான் அடிக்கடி யோசிப்பேன். இங்கே நான், மோகன்லால், மம்மூட்டி, வெங்கடேஷ், சரத்குமார் மாதிரியானவங்களை கலைத் தாய் தன் கையைப் பிடிச்சு அழைச்சுட்டுப் போறா. ஆனா, கமலை மட்டும் தோள்ல தூக்கிவெச்சு மார்போடு அணைச்சுட்டுப் போறா. நான் கலைத் தாய்கிட்டே கேட்டேன், ‘ஏம்மா, இது உனக்கே நியாயமா? நாங்களும் உன் குழந்தைங்கதானே… அப்புறம் ஏன் இந்தப் பாரபட்சம்?’னு. அதுக்கு கலைத் தாய் சொன்னாங்க… ‘ரஜினி! நீ போன ஜென்மத்துலதான் நடிகனாகணும்னு ஆசைப்பட்டே. ஆனா, கமல் ஒரு ஜென்மத்துல டான்ஸ் மாஸ்டர், இன்னொரு ஜென்மத்துல அசிஸ்டென்ட் டைரக்டர், வேறொரு ஜென்மத்துல நடிகர், இன்னும் ஒரு ஜென்மத்துல டைரக்டர்னு கடந்த 10 ஜென்மங்களா போராடிட்டு இருக்கான். அதனாலதான் கமலைத் தோளில்வெச்சுக் கொண்டாடுறேன்!’னு சொன்னா. கமல் வாழ்ந்த காலத்தில், கமல் நடித்த காலத்தில் நானும் வாழ்ந்தேன், நானும் நடித்தேன்கிற பெருமையே போதும்!’ என்று படபடவெனத் தன் பாணியில் ரஜினி பாராட்டி அமர, கமல் கண்களில் கண்ணீர்த் திரை.
தொடர்ந்து மேடையில் இருவரும் கட்டியணைத்துக் கண்ணீரில் கரைந்த அந்தக் கணங்கள் நட்பு இலக்கணத்துக்கான அபூர்வ அத்தியாயங்கள்.
ஆனால், அத்தியாயம் அதோடு முற்றுப் பெறவில்லை. விழா முடிந்து வீட்டுக்குச் சென்ற பிறகும் ரஜினியின் மனதில் நீங்காத நினைவலைகள். சட்டென்று முடிவெடுத்து, ஒரு பிரபல ஓவியரிடம் தனது மனதில் தோன்றிய எண்ணத்தைச் சொல்லியிருக்கிறார்.
கலைத் தாய் கமலைத் தன் தோளில் தூக்கிக்கொண்டு சிரஞ்சீவி, மோகன்லால், விஷ்ணுவர்தன், ரஜினி, அமிதாப் பச்சன் ஆகியோரைத் தன் கைப்பிடித்து அழைத்துச் செல்வது போன்ற ஓவியத்துக்கு உயிர் கொடுப்பதுதான் ரஜினியின் திட்டம். குழந்தை உடலில் இவர்களது இளமைக் காலத் தத்ரூப முகங்கள் வர வேண்டுமென்பது மாஸ்டர் பிளான். கமலுக்கு இந்த ஓவியம்பற்றிய தகவல் சென்றுவிடக் கூடாது என்று கண்டிப்பான உத்தரவிட்டிருக்கிறார் ரஜினி. 30 இஞ்ச் அகலமும், 40 இஞ்ச் உயரமுமாக ஓவியம் முழுமையடைந்தபோது ரஜினி முகத்தில் பரம திருப்தி.
கடந்த வாரத்தில் ஒருநாள் கமலுக்கு அந்த அன்புப் பரிசை அனுப்பி இருக்கிறார் ரஜினி. பார்சலைப் பிரித்து ஓவியத்தைப் பார்த்த கமல் நெகிழ்ந்துவிட்டார். சில நிமிடங்கள் ஓவியத்தை உற்றுப்பார்த்தவர் கண்களில் மெல்லிய கண்ணீர்த் திரை. உடனே, ரஜினியைத் தொடர்பு கொண்டார் கமல்.
‘ஹாய் கமல், எப்டி எப்டி? நல்லா இருந்துச்சா? ஆர் யூ ஹாப்பி?’ என்று ஆர்வமும் எதிர்பார்ப்புமாக விசாரித்திருக்கிறார். நெகிழ்வும் மகிழ்வுமாகப் பதில் வார்த்தைகளை உதிர்த்திருக்கிறார் கமல்.
‘சிவாஜி, நாகேஷ் இவங்க ரெண்டு பேர் படம்தான் இதுவரை என் ஆபீஸ்ல மாட்டியிருக்கேன். இனி, ரஜினியின் இந்தப் பரிசுக்கும் என் ஆபீஸ்ல ஓர் இடம் நிரந்தரம்!’ என்று மனம் திறந்திருக்கிறார்.
உயிரைக் குழைத்து வரைந்த அந்த ஓவியம் ரஜினி – கமலின் நட்பின் நினைவுச் சின்னமாக கமலின் அலுவலகத்தில் மின்னிக்கொண்டு இருக்கிறது!

Saturday, January 29, 2011

சமயம் என்பது மனிதனுடைய மனதை சமைப்பது...

சமயம் என்பது மனிதனுடைய மனதை சமைப்பது... அரிசி சற்று கடினமான பொருள். அதை கொதிக்கின்ற நீரில் போட்டு வேக வைத்தலை சமைத்தல் என்று சொல்கிறோம். ஒரு பெண் வாழ்க்கைக்கு பக்குவப்பட்டுவிட்டால் என்றால் அதை சமைந்து விட்டாள் என்று சொல்கிறோம். அதே மாதிரி மனிதனுடைய மனம் பல எண்ணங்களாலும் சிந்தனைகளாலும் மாறுபட்டு இருப்பதை நெறிப்படுத்துவது சமயம். அந்த சமயத்தில பக்தி என்பது இறைவன் மீது அன்பு செலுத்துவது. ஆன்மீகம் என்பது ஒரு அடிப்படை நெறியை நமக்கு புகட்டுவது. 
ஆகவே பக்தி என்பது அன்பின் வழியாக இறைவனை அடைவதற்கு உரிய நெறி. ஆன்மீகம் என்பது சமயத்தை தெரிந்து கொள்வதற்கு உரிய வகுப்பு போன்ற கட்டுப்பாடுகளைக் கொண்டது. இப்படித்தான் இருக்க வேண்டும். இப்படித்தான் கோவிலில் நடக்க வேண்டும் என்று காட்டுவது ஆன்மீகம். ஆன்மாவை இகப்படுத்துவது ஆன்மீகம்.
பக்தி வழிபாட்டில் ஆகம வழிபாடும் இருக்கிறது. பக்தி வழிபாடும் இருக்கிறது. சிவகோச்சாரியாருடய வழிபாடு ஆகம வழிபாடு. கண்ணப்ப நாயனாருடைய வழிபாடு பக்தி வழிபாடு. ஆனால் பக்திக்குத்தான் இறைவன் அனுக்கிரகம் செய்தான்னு எல்லாரும் சொல்றாங்க. அதே நேரத்தில சிவகோச்சாரியாருடைய கனவிலதான் சுவாமி வந்தார். அதனால், வளர்ச்சி அடைந்தவர்களுக்கு ஆகம நெறியும்... வளர்ச்சி அடையாதவர்களுக்கு.... குறிப்பாக கோவிலுக்கு போயி அப்பனே முருகா.. எனக்கு நீண்ட ஆயுளைக்கொடு... செல்வத்தைக் கொடு.. பிள்ளைகளுக்கு படிப்பைக் கொடு... அப்படின்னு கேப்பாங்க" அவங்களுக்கு பக்தி வழிபாடும் சொல்லப்பட்டிருக்கிறது. 
அதே மாதிரி சிறு தெய்வ வழிபாடுன்னு சொல்லக்கூடிய மாடன் காடன் என்பது எல்லாம் சிவனைக் குறிக்கின்ற சொற்கள்தான். மாடன் என்றால் செல்வம் உடையவன் என்று பொருள். மாடு என்றால் என்றாலே செல்வம்தான். அதே மாதிரி சுடலைக் காட்டில் இருப்பதால் சிவபெருமானுக்கு காடன் என்றும் பெயர். வளர்ச்சி அடைந்த பின்னர் வார்த்தையில் வித்தியாசம் உருவாகிறது. அதை ஆகமம் என்று சொன்னார்கள். இரண்டு வகையிலும் இறைவன் அனுக்கிரகம் செய்வார் என்பது கண்ணப்ப நாயனாரின் வழிபாட்டில் தெரிகிறது. ஆகவே பக்தி என்பது கண்ணப்ப நாயனாரின் வழிபாடும், ஆன்மீகம் என்பது சிவகோச்சாரியாரின் வழிபாடும் ஆகும்.

Find peace

At the heart of who you are, there is peace. When you let go of all that is covering it up, you find peace.
Go ahead and feel those things that hide your peace from you. Appreciate the fact that you can feel them whenever you chose.
Then, realize that just as you can choose to feel them, you can choose to let them go. Discover for yourself that you do indeed have the power to uncover the peace that lives in your heart.
One by one, you can easily and naturally dispense with those feelings that separate you from the peace that is yours. With sincere thankfulness for what you feel, you can let go of each feeling.
What you are left with is peace. What you are left with, is the powerful serenity of being beyond need, beyond fear, beyond frustration and anxiety.
By connecting to the peace within, you are free to take life as it comes. And when you do, you'll find that it comes in great abundance.
By:Ralph Marston

Friday, January 28, 2011

இண்டர்லோக் நாவல் சில திருத்தங்களோடு நீடிக்கும் - டான்ஸ்ரீ மொகிதீன் யாசின்

சர்ச்சைக்குரிய இண்டர்லோக்  நாவல் ஜந்தாம் படிவ மாணவர்களின் மலாய் இலக்கிய பாடமாக நீடிக்கும் என்றும் ஆனால் இந்தியர்களைப் புண்படுத்துவதாக கருதப்படும் வாசகங்கள் அகற்றப்படும் என்றும் துணை பிரதமர் டான்ஸ்ரீ  மொகிதீன் யாசின் கூறியுள்ளார்.

இதுவே இந்தப் பிரச்சினைக்கு சிறந்த தீர்வாக அமையும். திருத்தங்களை மேற்கொள்வதற்கு சுயேச்சைக் குழு ஒன்று அமைக்கப்படும். அந்தக் குழு திருத்தங்கள் குறித்து ஆராய்ந்து கல்வியமைச்சுக்கு பரிந்துரை செய்யும் என்று கல்வி அமைச்சருமான மொகிதீன் யாசின் ஓர் அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளார்.

Each time you do

If you're looking to become more confident, look in the mirror. The person who can give you real confidence, is you.
Others can teach you, encourage you, and express their own confidence in you. Yet if you wish to have confidence in yourself, you must earn it for yourself.
The only way you can know your abilities is by putting them to work. Real confidence comes from your own experience of doing.
Every challenging situation is an opportunity for you to strengthen your confidence. Within every difficulty is the very real potential for growth.
The experience of making an effort creates confidence. The experience of making another effort, and another and another, until you get the job accomplished, creates even stronger confidence.
Confidence comes when you know you can do it, and the only way to know that is to do it. Step forward, take action, and your confidence will grow each time you do.
By:Ralph Marston

Thursday, January 27, 2011

Making dreams come true

Dreams do indeed come true, but not on their own. Desires are most certainly fulfilled, but not just by wishing.
Dreams and desires provide the powerful energy necessary for achievement, and yet someone must focus and direct that energy. When it comes to your dreams, that is your job.
Go ahead, dream the biggest, most wonderful and personally meaningful dream you can imagine, and feel the intensity of your longing for it. Then, with your passion at full throttle, get busy making that dream a reality.
The joy of accomplishment is in the doing, and in feeling the dynamic strength of your own capabilities. What you truly seek is not to have, but to do, to create, to experience the feeling of being purposefully effective.
If you could have anything just by wishing, what would be the point, what would be the value? Fortunately, you have the opportunity to create great value precisely because your every wish does not instantly materialize.
You have the opportunity to give life to any dream by giving your effort, attention, focus and commitment to it. And by so doing, not only are you able to achieve the dream, you also give it real meaning.
By:Ralph Marston

Kekosongan Jawatan Pembantu Am Pejabat Gred N1

You'll get through

You'll get through this day, and you'll have more strength, richness and wisdom as a result. You'll get through this month, this year, this life, all while adding to the already-great value that is your existence.
You have what it takes to find your way through, and indeed you will. Though it won't always be easy or comfortable or convenient, you will surely and steadily move forward.
You can choose to let the fears hold you back for a while. Or you can choose to let those fears inform and prepare you, and then move on through them to where you are meant to be.
You can come up with all sorts of creative excuses to avoid making progress. Eventually, though, you'll realize what you're missing and will decide to leave those excuses behind.
Whatever comes along, you'll get through it. At some point you'll learn to stop fighting, to stop struggling, to stop complaining, and allow yourself to successfully handle whatever comes your way.
The worries, the fears, the anxieties and moments of hesitation will all be proven wrong. Because one way or another, you will get through.

By:Ralph Marston

Tuesday, January 25, 2011

தெனாங் தொகுதியில் இந்தியர்களின் அமோக ஆதரவு - டத்தோ பழனிவேல்

தெனாங் சட்டமன்றத் தொகுதியில் தேசிய முன்னணிக்கு இந்திய வாக்காளர்களின் ஆதரவு அதிகரித்திருக்கிறது. இந்த இடைத்தேர்தலில் தேசிய முன்னணி வேட்பாளர் அமோக வெற்றியை பெறுவார் என்று ம.இ.கா. தேசியத் தலைவர் டத்தோ ஜி.பழனிவேல் தெரிவித்தார்.
நேற்று தெனாங் தொகுதியில் வாக்கு வேட்டையாடிய டத்தோ பழனிவேல் இவ்வாறு கூறினார்.
இந்தத் தொகுதியில் சுமார் 1700 இந்திய வாக்காளர்கள் இருக்கிறார்கள். அதில் 1400 பேர் ம.இ.கா. கிளைகளில் உறுப்பினர்களாக உள்ளார்கள். இவர்களுடைய வாக்குக்கள் சிதறாமல் தேசிய முன்னணிக்கு கிடைக்கும் என்று அவர் நம்பிக்கைக் தெரிவித்தார்.
வேட்புமனுத்தாக்கல் நாளன்று தெனாங் தொகுதிக்கு பிரதமர் வருகை தந்திருந்தார். அப்போது ஆயிரக்கணக்கான இந்தியர்கள் திரண்டு வந்து பிரதமருக்கு ஆதரவு தெரிவித்தனர். மேலும் இந்த தொகுதியில் இருக்கும் இந்திய சமூகத்தினரில் பெரும்பாலானோர் ஆதரவு தேசிய முன்னணிக்கு திரும்பி இருக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.
ம.இ.கா. தேர்தல் களப் பணியாளர்கள், தேசிய முன்னணியின் வெற்றிக்கு சூறாவளியாக சுழன்று வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். தொகுதி முழுவதும் அவர்கள் வாக்கு வேட்டையாடி வருகிறார்கள். ம.இ.கா. தலைவர்கள் முழு மூச்சாக களம் இறங்கி வெற்றிக்கு பாடுபட்டு கொண்டிருக்கிறார்கள் என்று டத்தோ பழனிவேல் கூறினார்.

இண்டர்லோக் நாவல் தடை ஒன்றே தீர்வு : அரசு சார்பற்ற இயக்கங்கள்

இண்டல்லோக் நாவலில் சில திருத்தங்கள் செய்து வெளியிட வேண்டுமென்ற பேச்சுக்கே இடமில்லை. அந்நாவலை முற்றாக தடை செய்ய வேண்டும் என அரசு சார்பற்ற இயக்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.  நேற்று இரவு பெட்டாலிங் ஜெயா மலேசிய இந்து சங்க தலைமையகத்தில் நடைபெற்ற அரசு சார்பற்ற இயக்கத் தலைவர்கள் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சுமார் 60 இயக்கங்களை சேர்ந்த தலைவர்கள் இதில் கலந்து கொண்டனர். இண்டர்லோக் நாவல் குறித்து அவர்கள் கூறுகையில், ஒரே மலேசிய கொள்கைக்கு எதிராக ஒரு சமுதாயத்தை இழிவுப்படுத்தி பள்ளிகளில் இந்த நாவல் வழங்குவதை ஏற்க முடியாது. 
ம.இ.கா தேசிய தலைவர் டத்தோ ஜி.பழனிவேல் இந்த நாவலை மீட்டு கொள்ள வேண்டும் என அறிவித்துள்ளதை நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம் என அவர்கள் கூறினார்கள்.
இண்டர்லோக் நாவல் மீட்டு கொள்ளவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன் பெயர் "இண்டர்லோக் நடவடிக்கை குழு" (Interlok Action Committee).
இந்த குழுவில் பாலா தம்பிலிங்கம், சிஎம் கோபாலன் மற்றும் அருண் துரைசாமி (மலேசிய இந்து சங்கம்), ஹாஜி தஸ்லிம் முகமட் இப்ராகிம் (சுயேட்சை), ஜி.கிஷோர் (மலேசிய இந்திய மாணவர்கள் கழகம்), அழகேஷ் பத்துமலை (மலேசிய இந்திய இளைஞர் கழகம்), எ.முரளி (தமிழன் உதவும் கரங்கள்), எபி இராஜரத்தினம் மற்றும் வி.சுப்பையா (மலேசிய இந்தியர் இயக்கங்கள் ஒருங்கிணைப்பு பேரவை).
இண்டர்லோக் நூல் மீட்டுக்கொள்ளப்பட வேண்டும் என்று கோரும் கடிதம் ஒன்று இன்று பிற்பகல் மணி 12.30 அளவில் பிரதமர்துறை இலாகாவில் தாக்கல் செய்யப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Monday, January 24, 2011

Vacancy at Lembaga Pembangunan Langkawi (LADA)

Permohonan adalah dipelawa daripada warganegara Malaysia yang berkelayakan untuk mengisi jawatan di Lembaga Pembangunan Langkawi (LADA).

1. PEGAWAI EHWAL EKONOMI GRED E48

KLIK SINI UNTUK IKLAN PENUH SERTA SYARAT KELAYAKAN :  

http://www.lada.gov.my/v1/jawatan-E48.pdf

KLIK SINI UNTUK MUAT TURUN BORANG PERMOHONAN : 

 http://www.lada.gov.my/v1/borang-j.pdf

Cara Memohon :

(a) Borang-borang permohonan boleh didapati dengan melayari laman web LADA
di alamat www.lada.gov.my. Borang permohonan yang telah siap diisi hendaklah disertakan dengan salinan sijil-sijil atau salinan keputusan peperiksaan akhir bagi kelayakan yang diisyaratkan dan sekeping gambar terbaru berukuran passport, sijil kelahiran, surat berhenti sekolah dan lain-lain dokumen yang berkaitan serta disahkan.

(b) Setiap permohonan mestilah ditulis (NAMA JAWATAN YANG DIPOHON) di bahagian atas sebelah kiri sampul. Permohonan yang telah lengkap diisi dan ditandatangani hendaklah dikemukakan ke alamat seperti di bawah:-

Pengurus Besar
Lembaga Pembangunan Langkawi
Tingkat 3, Kompleks LADA
Jalan Persiaran Putra
07000 Langkawi
KEDAH DARUL AMAN
(u.p: Bahagian Sumber Manusia dan Khidmat Pengurusan)

Tarikh tutup permohonan ialah pada 10 Februari 2011. Sebarang pertanyaan
lanjut bolehlah menghubungi Bahagian Sumber Manusia dan Khidmat Pengurusan di
talian 04-9667186/7187.

Perhatian: Hanya calon yang layak selepas tapisan sahaja akan dipanggil temu duga. Pemohon yang tidak menerima sebarang jawatan selepas 3 bulan dari tarikh tutup permohonan
hendaklah menganggap bahawa permohonan mereka tidak berjaya.

Vacancy at Majlis Perbandaran Nilai...

Permohonan adalah dipelawa daripada WARGANEGARA MALAYSIA dan keutamaan adalah daripada rakyat Negeri Sembilan Darul Khusus yang berkelayakan dan berumur tidak kurang daripada 18 tahun pada tarikh tutup iklan adalah untuk mengisi kekosongan jawatan-jawatan seperti berikut:-

1.Juruteknik (Awam) GRED J17
2.Juruteknik (Komputer) GRED FT17
3.Pembantu Penilaian GRED W17
4.Pembantu Juruaudit GRED W17

Tarikh Tutup Permohonan: 31 Januari 2011

More info and application :  

Sunday, January 23, 2011

நமது இளைய சமுதாயத்தினரிடம் தமிழ் விழிப்புணர்வு குறைந்துவிட்டதா...?

இன்றைக்கும் தமிழ் மொழி உயிரோடு இருப்பதன் ஒரே ஒரு காரணம், தமிழை பேசுபவர்கள் ஆறு கோடிக்கும் மேற்பட்டவர்களாக இருப்பதுதான். ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை ஒன்றில் முப்பது ஆண்டுகளில் அழியப் போகின்ற மொழிகளில் ஒன்றாக தமிழும் இருப்பதாக செய்தி ஒன்று சில ஆண்டுகளுக்கு முன்பு ஊடகங்களில் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் முப்பது ஆண்டுகளில் எல்லாம் தமிழ் அழிந்து விடாது. முப்பது ஆண்டுகள் என்பது மிகைப்படுத்தப்பட்ட ஒன்று. அதே வேளை நீண்ட காலத்திற்கு நாம் இப்படி இறுமாப்போடு இருக்க முடியாது. பேசுபவர்களின் எண்ணிக்கையில் மட்டும் ஒரு மொழியின் இருப்பு தங்கியிருக்க முடியாது. எண்ணிக்கையும் மாறுபடக் கூடிய ஒன்றுதான். மொழி அழிவதற்கு தேவையான மற்றைய காரணிகளும் தமிழில் இருக்கின்றன. ஆகவே தமிழ் மொழி நீடித்து நிலைக்க வேண்டும் என்ற சிந்தனை ஒவ்வொரு தமிழரின் நெஞ்சிலும் இருந்தால் மட்டும்தான், தமிழ் மொழி நீண்ட காலத்திற்கும் நிலைக்கும். இல்லையென்றால் "அழிந்து போன மொழிகளின் பட்டியலில்" தமிழ் இடம் பெறுவது தவிர்க்க முடியாததாகி விடும். 
இன்னும் நம் இளைய சமுதாயத்தினரும், பெற்றோர்களும், சமுதாய தலைவர்களும் தமிழ் மொழி உதாசினப்படுத்த ஆரம்பித்தால், கூடிய விரைவில் நம் வருங்கால தலைமுறையினர் தமிழ் என்பது முன்பு இந்தியாவில் தென் பகுதியில் பேசப்பட்ட மொழி என்று சரித்திர பாடப் புத்தகத்தில் படிக்கும் நிலை வரலாம்.
நம் நாட்டில் பல தமிழ் பத்திரிக்கைகள், நாளேடுகள் பல உள்ளன. தமிழ் எவ்வாறு நமது நாட்டில் மறையும் என கேட்கலாம். நம் நாட்டில் அதிகமாக தமிழ் பேச மற்றும் எழுத தெரிந்தவர்களில் 35 வயதுக்கு மேற்பட்டவர்களே அதிக உள்ளனர். இனி அடுத்த தலைமுறையினர். வரும் பொழுது இது இன்னும் குறையலாம். 
அதுமட்டுமல்ல இணையத்தில் மலேசியா தமிழர்களின் தமிழ் பங்களிப்பு மிகவும் முறைவு. உலகில் உள்ள பல தமிழ் இணையத்தளங்களில் "உலகத் தமிழர்கள் செய்தி" பிரிவில் மலேசிய தமிழ்களை பற்றிய செய்தியை நாம் காண்பதே அரிது. பேஸ்புக்கில் பல மணி நேரம் செலவு செய்யும் நம் இளைய சமுதாயம் தமிழில் ஒரு ப்ளாக் (blog) எழுத தயங்குகிறார்கள்.
ஏற்கனவே நம் நாட்டில் மக்கள் தொகையோடு தமிழ் எழுதப் படிக்க தெரிந்தவர்களில் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. எங்கள் பகுதியில் தமிழ் பள்ளி இல்லை, ஆரம்ப பள்ளி வரை தமிழ் படிக்க முடிகிறது, தமிழ் படிப்பதால் வேலை கிடைப்பதில் சிரமம் என நாம் ஆயிரம் காரணம் சொல்லி தமிழை புறக்கணிப்பதை விட அதை கற்க ஒன்றினைந்து புதிய வழியை உருவாக்க வேண்டும். இதனை நம் தமிழ் சமுதாய தலைவர்கள் செய்வார்களா...?

அறிஞர்கள் கொடுத்துள்ள முடிவுதான் ம.இ.கா.வின் நிலைப்பாடும்

இண்டர் லோக் நாவல் மீட்டுக் கொள்ளப்பட வேண்டும் என்று ம.இ.கா. அமைத்த அமைத்த அறிஞர்கள் குழு ஆழமாக ஆய்வு நடத்தி முடிவை பரிந்துரை செய்துள்ளது. அறிஞர்கள் கொடுத்துள்ள முடிவுதான் ம.இ.கா.வின் நிலைப்பாடும். ம.இ.கா. அதில் இருந்து பின்வாங்காது என்று ம.இ.கா. தேசியத் தலைவர் டத்தோ ஜி.பழனிவேல் கூறினார்.

இண்டர் லோக் நாவல் பற்றி கல்வி அமைச்சுடன் கலந்துரையாடல் நடத்தி அதில் இருக்கும் அம்சங்கள் அகற்றப்பட வேண்டுமா.. இல்லை நாவலே மீட்டுக் கொள்ளப்படவேண்டுமா... என்பதை ஆய்வு செய்ய அண்மையில் பேராசிரியர் டாக்டர் டி. மாரிமுத்து தலைமையில் ம.இ.கா. அறிஞர்கள் குழு ஒன்றை அமைத்தது.

நாவல் குறித்து அந்தக் குழு அணுக்கமாக ஆராய்ந்து, நாவலை மீட்டுக் கொள்வதுதான் சிறப்பான தீர்வாக அமையும் என்று கருத்துக் கூறியிருக்கிறது. இந்த முடிவில் ம.இ.கா.வின் நிலைப்பாடு என்ன என்பதை டத்தோ பழனிவேல் தெளிவாக எடுத்துக் கூறியிருக்கிறார்.

இதனிடையே, இந்த நாவல் பற்றி பேசிய கல்வி அமைச்சர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின்," நாவலை மீட்டுக் கொள்வதை விட.. அதில் இருக்கும் சர்ச்சைக்குரிய வாசகங்களை அகற்றுவதை விட.. அந்த வார்த்தைகள் குறித்து புத்தகத்தின் பின் பக்கத்தில் விளக்கக் குறிப்புகளைத் தரலாம். அதை படிக்கும் மாணவர்கள் அந்தக் காலம் வேறு இந்தக் காலம் வேறு என்பதைப் புரிந்து கொள்வார்கள்" என்று கூறியிருந்தார்.

ஆனால் அது சரியான தீர்வாக இருக்காது. அதனால் மேலும் குழப்பம் தான் உருவாகும். ஆகவே, கல்வி அமைச்சு காரணங்களைக் கூறிக் கொண்டிருக்காமல் இந்த நாவலை மீட்டுக் கொள்ள சரியான நடவடிக்கையை விரைவாக எடுக்க வேண்டும் என்று டத்தோ பழனி குறிப்பிட்டார்.

இண்டர் லோக் நாவல் பிரச்சினை முடிவுக்கு வராமல் நீண்டு கொண்டே போவது பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கின் ஒரே மலேசியா கொள்கைக்கு பின்னடைவைக் கொண்டு வரும் என்பதில் சந்தேகமில்லை.

மாணவர்கள் மத்தியில் தவறான சிந்தனையை ஏற்படுத்தும் என்பதோடு மனரீதியான பாதிப்புகளையும் உண்டு பண்ணும் என்பதையும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். இந்திய சமுதாயத்தை இளைய தலைமுறையினர் எதிர்காலத்தில் இண்டர் லோக் நாவலை அடிப்படையாக வைத்து பார்க்கும் நிலை உருவாக அரசாங்கம்  அனுமதிக்கக் கூடாது.

பாலியல் கல்வியை பள்ளிக்கூடங்களில் போதிக்கலாம் என்றும் மாணவர்களிடையே பாலியல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி தவறான போக்குகளைத் தடுக்க அது உதவும் என்றும் கடந்த சில ஆண்டுகளாக கல்வியாளர்களால் ஆலோசனை கூறப்படுகிறது.

அதைக் கருத்தில் கொண்ட கல்வி அமைச்சு பாலியல் கல்வி குறித்து பரவலாக ஆய்வு நடத்தி வருகிறது. பாலியல் கல்வி வேறு ஏதேனும் பாதிப்புக்களை ஏற்படுத்தி விடுமோ என கல்வி அமைச்சு ஆழமாக ஆய்வு நடத்தி வருகிறது.

அது மாதிரிதான் இண்டர் லோக் நாவல் பிரச்சினையையும் எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் இருக்கும் சாதக பாதகங்களை அணுக்கமாக ஆராய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

அதே நேரத்தில் ம.இ.கா. அமைத்த அறிஞர்கள் குழு எடுத்திருக்கும் முடிவை நடைமுறைப்படுத்த ம.இ.கா. தொடர்ந்து பாடுபடும். அந்த நிலையில் இருந்து மாறாது என்று டத்தோ பழனிவேல் தெரிவித்தார்.

Friday, January 21, 2011

Buying life insurance for you and your loved ones



Buying life insurance for you and your loved ones helps provide some financial security in times of hardship. The money from your policy will be paid to your loved ones when you pass away or to you should you suffer a total and permanent disability or loss.



Life insurance is an essential aspect in your long term financial planning. It helps to reduce financial strain on your family after you pass away. This is especially crucial if you are the sole breadwinner.




A retirement annuity provides you with a stream of income payments that will continue for the rest of your life. This guarantees you to have a dependable source of income, even after you retire.

.


Investment-linked insurance allows you to combine insurance with investment as part of your insurance plan. You can choose the amount to allocate for your investment as well as your insurance.




Start early in planning for your child’s education, it can be the smartest investment move you’ll make in your life. Familiarise yourself on the many child education planning policies available in the market.
more details call: +6012-6436696



”இண்டர்லோக்” பாடநூல் சர்ச்சைக்குத் தீர்வாக அமையலாம்

பின் இணைப்புக்  குறிப்புகள், அருஞ்சொல் அகராதி, வழிகாட்டி போதனாமுறைகள்  முதலானவை, ”இண்டர்லோக்” பாடநூல்  சர்ச்சைக்குத்  தீர்வாக அமையலாம் என்று  துணைப் பிரதமரும்  கல்வி அமைச்சருமான முகிதின் யாசின் கூறியுள்ளார். 
ஆயினும், ஐந்தாம் படிவ மலாய் இலக்கியப் பாடத்திட்டத்திலிருந்து அந்த நூலை மீட்டுக் கொள்வது உட்பட இறுதி முடிவு இன்னும் செய்யப்படவில்லை.
கடந்த செவ்வாய்க்கிழமையன்று கல்வி அமைச்சு, மஇகா மற்றும் இதர அமைப்புக்களுக்கிடையே நடத்தப்பட்ட பேச்சுக்கள், “இண்டர்லோக்” நாவல் இந்திய சமூகத்தை இழிவுப்படுத்தும் நோக்கத்தைக் கொண்டிருக்கவில்லை என்ற ஒருமித்த இணக்கத்தை கண்டதாக முகிதின் தெரிவித்தார்.
“ஒரே மலேசியா கோட்பாடிற்கேற்ப, இனங்களுக்கிடையிலான தேசிய ஐக்கியம் மற்றும் ஒருங்கிணைப்பு குறித்து அந்த நாவலில் விவாதிக்கப்படுகிறது. அதில் பயன்படுத்தப்பட்ட குறிப்பிட்ட சில சொற்கள் குறித்து மஇகாவும் குறிப்பிட்ட சில இந்திய அமைப்புக்களும் கவலை தெரிவித்துள்ளன.”
“சில யோசனைகளை நாங்கள் (கல்வி அமைச்சு) தெரிவித்துள்ளோம். பின் இணைப்புக் குறிப்புகள், அருஞ்சொல் அகராதி, வழிகாட்டிகள் உட்பட, அந்த விவகாரத்துக்கு ஒரு  திட்டவட்டமான தீர்வைக் காண்பதற்கு மஇகாவுடன் மேலும் பேச்சுக்கள் நடத்தும்படி அமைச்சரவை எங்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.”
அந்தச் சர்ச்சைக்கு மனநிறைவளிக்கும் ஒரு தீர்வைக் காண்பதற்கு, சம்பந்தப்பட்ட தரப்புக்களுடன் மேலும் பேச்சுக்கள் நடத்தப்படும் என்றாரவர். கூடிய விரைவில் ஒரு முடிவு காணப்படும் என இன்று தெனாங்கில் செய்தியாளர்களிடம் துணைப் பிரதமர் கூறினார்.
கடந்த செவ்வாய்க்கிழமையன்று  நடத்தப்பட்ட பேச்சுக்களில், மஇகாவின் ஆறு பிரதிநிதிகள் உட்பட பல்வேறு அமைப்புக்களைச் சேர்ந்த 22 பேராளர்கள் கலந்து கொண்டனர். துணைக் கல்வி அமைச்சர் டாக்டர் முகமட் புவாட் சர்காஷி  அந்த கூட்டத்துக்கு தலைமை வகித்தார்.
அந்த பேச்சுக்களின் முடிவுகள் குறித்து அமைச்சரவையிடம் முகிதின் விளக்கமளித்தார். அது குறித்து சம்பந்தப்பட்ட தரப்புக்களுடன் மேலும் பேச்சுக்கள் நடத்தும்படி அமைச்சுக்கு ஆணையிடப்பட்டுள்ளது.

Thursday, January 20, 2011

இன்றைய இளைஞர்களுக்குத் திருவள்ளுவரின் வாழ்வியல் நெறிகள்

இன்றைய இளைஞர்கள்
இன்றைய இளைஞர்களுக்குத் திருவள்ளுவர் கூறும் வாழ்வியல் நெறிகள் சிலவற்றைச் சுட்டிக் காட்டுவதாக இக்கட்டுரை அமைகின்றது.
இருபத்தொன்றாம் நூற்றாண்டில் அறிவியல் வளர்ச்சி காரணமாகச் சமுதாய அமைவுகளில் பலவிதமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. கூட்டுக் குடும்ப அமைப்பு சிதைந்து, தனிக் குடும்ப அமைப்பு மேலோங்கி உள்ளது. பழைய மரபுகளும், சிந்தனைகளும் உடைக்கப்பட்டுப் புதிய சித்தாந்தங்களும், புதிய மரபுகளும் படைக்கப்பட்டுள்ளன.
இவ்விதமான சமுதாயச் சூழ்நிலைகளில்தான் இன்றைய இளைஞர்கள் வளர்கின்றனர். வேலை காரணமாக வெளிநாடுகளுக்கும், பிற மாநிலங்களுக்கும் இளைஞர்கள் செல்கின்றனர். பொருள் சம்பாதித்தல் ஒன்றே அவர்கள் வாழ்வின் குறிக்கோளாக மாறி உள்ளது. இதனால் பிற சமூகச் சூழல்களாலும் பாதிப்படைகின்றனர். இவ்விதமான சூழலில் வாழ்கின்ற இருபத்தொன்றாம் நூற்றாண்டு இளைஞர்களுக்கு இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருவள்ளுவரின் வாழ்வியல் நெறிகளை நினைவூட்ட வேண்டிய காலக்கட்டத்தில் நாம் உள்ளோம்.
திருவள்ளுவர் இளைஞர்களுக்குத் தேவையான நெறிகளைச் சுட்டிக்காட்டிச்சென்றுள்ளார். அவர் காட்டும் வாழ்வியல் நெறிகளைக் கீழ்க்காணும் வகையில் நாம் அறிந்து கொள்வோம்.
1. அன்புடைமை
2. பகுத்தறிதல்
3. வாய்மை
4. குற்றங்கடிதல்
5. வினைத் தூய்மை
6. கள்ளுண்ணாமை
7. வெகுளாமை
1. அன்புடைமை
அன்பு என்பது வாழும் உயிர்களுக்குப் பொதுவான ஒன்றாகும். இது இயற்கையான உணர்வுகளில் ஒன்று. அதனால் தான் மனிதப் பிறவி விழுமியது என்று ஆன்றோரால் போற்றப் பெற்றது. அன்பு வழி வாழ்க்கை வேண்டும். அவ்வழியே வளரும் வாழ்க்கை பண்பும் பயனும் உடையதாகும்.
அன்பு உடையவர் பற்றியும், அன்பு இல்லாதவர் பற்றியும் வள்ளுவர் குறிப்பிடும் போது,
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு
 - - - (குறள். 72)
என்று கூறுகின்றார். அதாவது அன்பு இல்லாதவர் எல்லாப் பொருளையும் தமக்கே உரிமையாகக் கொண்டு வாழ்வர் எனவும், அன்பு உடையார் தம் உடம்பையும் பிறர்க்கு உரிமையாக்கி வாழ்வர் எனவும் குறிப்பிடுகிறார். மற்றொரு குறளில் அன்பின் தன்மையை,
அன்பின் வழியது உயிர்நிலை அஃதுஇலார்க்கு
என்பு தோல் போர்த்த உடம்பு
 - - - (குறள். 80)
என்று குறிப்பிடுகிறார்.
உடலில் உயிர்நிலை பெறுவது அன்பின் வழிபட்டதேயாகும். ஒருவருக்கு உயிர் இருக்கிறது என்பதற்கு அடையாளமே அவ்வன்புதான். அன்பு இல்லாதவருடைய உடம்பு எலும்பும், தோலும் போர்த்தப்பட்ட உடல் ஆகும். எனவே அன்பைப் பேண வேண்டும் என்பது திருவள்ளுவரின் சீரிய சிந்தனையாகும்.
2. பகுத்தறிதல்
அறிவுச்சிந்தனை இன்று பல நிலைகளில் மேம்பாடு அடைந்துள்ளது. பல துறைகளில் நாம் முன்னேறி உள்ளோம். திருவள்ளுவர் இந்த அறிவுச் செல்வத்தைக் கண்டடையும் வழிமுறைகளையும் கூறியுள்ளார்.
எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு
 - - - (குறள். 423)
என்றும்,
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு
 - - - (குறள். 355)
என்றும்,
சென்ற இடத்தான் செலவிடா தீதுஒரீஇ
நன்றின்பால் உய்ப்பது அறிவு
 - - - (குறள். 422)
எச்சிந்தனைகளானாலும் அச்சிந்தனைகளின் உண்மைப் பொருளை ஆய்ந்து அறிவதுதான் அறிவு. எனினும் வள்ளுவர் 422 ஆம் குறளில் மனத்தைச் சென்ற இடத்தில் விடாமல் தீமையானதிலிருந்து நீக்கிக் காத்து நன்மையானதில் செல்லவிடுவதே அறிவாகும் என்று குறிப்பிடுகிறார். கற்றல் மட்டுமே அறிவு அல்ல. நன்மை, தீமைகளையும் அறிவதே அறிவு என்பதைத் திருவள்ளுவரின் சிந்தனையாய்க் கொள்ளலாம்.
3. வாய்மை
"வாய்மை" இன்று மறைந்து போன ஒன்றாகக் காணப்படுகிறது. வாய்மை மனிதனுக்குத் தேவையான பண்பாக இருந்தாலும் கூட அது பல சமயங்களில் பின்பற்றப்படுவதில்லை. வாய்மையின் தன்மையைத் திருவள்ளுவர்,
வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்
 - - - (குறள். 291)
பொய்ம்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்
 - - - (குறள். 292)
என்கிறார்.
அதாவது "வாய்மை" என்பது பிறருக்கு எந்தவிதத் தீங்கும் செய்யாத சொற்களைச் சொல்வதுதான். பொய்யான சொற்களால் நன்மை விளையாது; பொய்யான சொற்களும் குற்றம் தீர்ந்த நன்மையை விளைவிக்குமானால் வாய்மை என்று கருதத்தக்க இடத்தைப் பெறுவனவாம் என்று கூறுகிறார்.
இந்நிலையினைத்தான் வள்ளலார்,
உள்ஒன்று வைத்துப் புறம்ஒன்று பேசுவோர்
உறவு கலவாமை வேண்டும்
என்று கூறுகின்றார்.
எனவே வாய்மையை மனித வாழ்வினில் கடைப்பிடித்தால் அது பலவிதமான நன்மையை உண்டாக்க வல்லதாகும்.
4. குற்றங்கடிதல்
ஒருவன் எவ்வளவு உயர்ந்த நிலையில் நின்றாலும், தன் உயர்வைத் தானே வியந்து தற்பெருமை கொள்ளக் கூடாது. அது அறிவுக் கண்ணை மறைக்கக் கூடியது. அவ்வாறு மறைத்தால் உண்மை விளங்காமல் போகும். பல தவறுகள் செய்து அழிவு தேடிக் கொள்ள நேரும்.
செய்த குற்றம் சிறிதே ஆனாலும், அதைப் பெரிய குற்றமாகக் கருதி மனம் வருந்துவது சான்றோர் பண்பு. குற்றம் வராமல் காக்கும் ஆற்றல் வளரும். குற்றம் வராமல் காத்துக் கொண்டால், வாழ்க்கைக்குத் தீங்கு நேராது.
தினைத்துணையாம் குற்றம் வரினும் பனைத்துணையாக்
கொள்வர் பழிநாணு வார்
 - - - (குறள். 433)
5. வினைத்தூய்மை
செய்கின்ற அல்லது செய்யப் போகின்ற செயல் புகழையும் நன்மையையும் தருமா என்று ஆராய்ந்து செய்ய வேண்டும். எவ்வளவு துன்பப்படுவதாக இருந்தாலும் தெளிந்த அறிவுடையவர்கள் இழிவான செயல்களைச் செய்ய மாட்டார்கள் என்பது வள்ளுவரின் வாக்கு. எனவேதான் அவர்,
ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை
 - - - (குறள். 656)
என்கிறார்.
அதாவது பெற்ற தாயின் பசியைக் கண்டு வருந்த நேர்ந்தாலும், சான்றோர் பழிப்பதற்குக் காரணமான இழிவுற்ற செயல்களை ஒருவன் செய்யக் கூடாது என்கிறார். எனவே வினைதனை மேற்கொள்வோர் இக்குறளினை நினைவில் கொள்ளுதல் நலம் பயக்கும்.
6. கள்ளுண்ணாமை
இன்றைய காலகட்டத்தில் கள் என்ற போதைப் பொருள் நவநாகரீகமான ஒன்றாகக் கருதப்படுகின்றது. வள்ளுவர் கள்ளுண்பவர்களின் நிலையைக் கீழ்க்கண்ட வகைகளில் குறிப்பிடுகின்றார்.
1. மதிப்பை இழந்து விடுவார்கள்.
2. பகைவரும் அஞ்சமாட்டார்கள்.
3. சான்றோரின் உறவும் போய்விடும்.
4. மற்றவர்கள் முன்பு குற்றவாளியாக நிற்க நேரிடும்.
மேலும் அவர்,
ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால்; என்மற்றுச்
சான்றோர் முகத்துக் களி
 - - - (குறள். 923)
என்ற குறளில் பெற்ற தாயின் முன்பாக மகன் கள்ளுண்டு மயங்குதல் துன்பம் தருவதாகும். அதனால் அந்த மகனைத் தாய் வெறுத்து ஒதுக்குவாள். அப்படியானால் தாயே வெறுத்து ஒதுக்கும்போது மற்ற சான்றோர்கள் அவனை எப்படி சகித்துக் கொள்வார்கள் எனக் கேட்கிறார். ஆகவே கள்ளுண்ணாமை நன்று என்கிறார் வள்ளுவர்.
7. வெகுளாமை
வலியார் மேல்சினம் பிறப்பது உண்டு; ஆனால் அப்போது அது பலிக்காது. மெலியார் மேல்சினம் பிறந்தால் அது அவர்களை வருத்தும்.
சினம் பலிக்காத வலியார் இடத்தில் மட்டும் சினம் கொள்ளாமல் காத்துக் கொள்வது போதாது. அங்கே சினம் காப்பதும் காவாமையும் ஒன்றுதான். சினம் பலிக்குமிடத்தில் காத்துக் கொள்வோனே சினம் காப்பவன். இது அருளுடையார் செயல் என்பார் திருவள்ளுவர்.
செல்லிடத்துக் காப்பான் சினம்காப்பான்; அல்விடத்துக்
காக்கின்என் காவாக்கால் என்?
 - - - (குறள். 301)
செல்லா இடத்துச் சினம்தீது; செல்லிடத்தும்
இல்அதனின் தீய பிற
 - - - (குறள். 302)
சினத்தை விடப் பெரிய பகை வேறு இல்லை. படையிடமிருந்து ஒருவன் தன்னைத் தான் காத்துக் கொள்ள விரும்பினால் சினம் வராமல் மனத்தைக் காத்துக் கொள்ள வேண்டும்; காக்கத் தவறினால் சினம் தன்னையே கொன்றுவிடும். ஆகவேதான் சினம் யாரிடம் உள்ளதோ அவர்களையே அழித்துவிடும் என்பது வள்ளுவர் வாக்கு. சினங்கொள்ளாமல் வாழ வழி வகுப்போம்.
எனவே இன்றைய இளைஞர்கள் திருவள்ளுவரின் வாழ்வியல் நெறிகளைத் தம்முடைய வாழ்வில் பின்பற்றினால் அவர்கள் வாழ்வு மேன்மை அடையும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை

பத்துமலை ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமிகளுக்கு காணிக்கை செலுத்த காலையில் இருந்தே பக்தர்கள் படையெடுப்பு தொடங்கி விட்டது


பத்துமலையில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமிகளுக்கு காணிக்கை செலுத்த காலையில் இருந்தே பக்தர்கள் படையெடுப்பு தொடங்கி விட்டது.
இன்று வானமும் முருகப் பெருமானின் வழிபாட்டுக்கு இடையூறு செய்யக்கூடாது என்று எண்ணியதோ என்னவோ மழை பெய்வதற்கான அறிகுறியே இல்லாமல் வானம் தெளிவாக இருக்கிறது.
பத்துமலைக் குகைக்கோவிலுக்கு செல்லும் படிக்கட்டுகளில் இடைவெளி இல்லாத அளவுக்கு பக்தர்கள் கூட்டம் மலையேறிக் கொண்டிருக்கிறது.
பால்குடங்கள் தூக்கி வருகின்ற பக்தர்கள் வெய்யிலுக்கு முன்னர் அழகன் முருகனுக்கு அபிஷேகத்தை முடித்து விட வேண்டும் என்ற நோக்கத்தோடு மலை ஏறிக் கொண்டிருக்கிறார்கள்.
காவடிகளும் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால், அவை  சிங்கார வடிவேலுக்கு நேர்த்திக் கடன் செலுத்தும் சின்னச் சின்ன காவடிகள்தான்.
காவடி எடுக்க ஆயத்தமாகும் இடமான ஆற்றங்கரையில் காவடிகளை அலங்கரிக்கும் வேலை மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. 
11 மணிக்கு மேல் பிரமாண்டமான காவடிகள் திருமுருகன் சந்நிதியை நோக்கி புறப்பட ஆரம்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கூட்டரசுப்பிரதேசம், சிலாங்கூர் மாநிலங்களுக்கு பொது விடுமுறை என்பதால் கூட்டம் அதிகமாக இருக்கிறது. 
அதே நேரத்தில் தைப்பூசத்துக்கு நேர்த்திக் கடன் செலுத்துகிறேன் என்று உள்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் வெளிநாட்டில் இருந்தும் பல பக்தர்கள் வேண்டிக் கொண்டு... அந்த வேண்டுதலை நிறைவேற்ற பத்துமலைக்கு வந்திருப்பதும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதற்கு காரணமாகும்.
பத்துமலைக்கு வருகின்ற பக்தர்களுக்கு சிரமம் ஏற்படக் கூடாது என்பதற்காக தேவஸ்தானம் பல்வேறு வசதிகளை செய்து கொடுத்திருக்கிறது.
பாதுகாப்பு ஏற்பாடுகளும் மருத்துவ வசதிகளூம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

தேசிய பயிற்சித் துறை சீக்கிய சமூகத்திடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் - ம.இ.கா. தேசியத் தலைவர் டத்தோ பழனிவேல்


தேசிய சேவைப் பயிற்சியில் இருந்த 17 வயது பாசந்த் சிங் என்ற சீக்கிய மாணவரின் தலைமுடி அறுக்கப்பட்ட சம்பவத்திற்கு தேசிய சேவைத் துறை சீக்கிய சமூகத்திடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று ம.இ.கா. தேசியத் தலைவர் டத்தோ பழனிவேல் தெரிவித்தார்.
இது சாதாரண விஷயம் அல்ல. உணர்ச்சிக் கொந்தளிப்பை ஏற்படுத்தக்கூடியது. தேசிய பயிற்சி அதிகாரிகள் பொறுப்பில் இருக்கும் போதுதான் இந்த அடாவடித்தனமான செயல் நடந்திருக்கிறது. 
ஆகவே பயிற்சி அதிகாரிகள் கண்டிப்பாக சீக்கிய சமூகத்திடம் மன்னிப்புக்கு கேட்க வேண்டும் என்று பழனிவேல் குறிப்பிட்டார்.
உடனே இது குறித்து மன்னிப்பு கேட்டு விட்டால் இந்தப் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்து விரும்பத்தகாத சர்ச்சைகளை உண்டு பண்ணாது என்று அவர் கூறினார்.
பிறந்ததில் இருந்தே தலைமுடியை வெட்டாதவர் பாசாந்த் சிங். கடந்த செவ்வாய்க்கிழமை இவர் தேசிய சேவைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த 10 பேருடன் தூங்கிக் கொண்டிருந்தபோது அவருடைய தலைமுடியை யாரோ அறுத்து இருக்கிறார்கள். இதனால் இந்த மாணவர் கடும் மன உளைச்சலில் இருக்கிறார்.

2nd time the prime minister visited Batu Caves in conjunction with the festiva


Prime Minister Datuk Seri Najib Tun Razak said the Malaysian society has reached the highest level of appreciation for the country's diversity through the 1Malaysia concept. This augured well for the country's bid to become a developed and successful nation.
 
"If we are able to celebrate diversity, we have reached the ultimate in terms of accepting diversity as a source of strength for our country," he said at the Thaipusam festival in Batu Caves here. This was the second time the prime minister visited Batu Caves in conjunction with the festival. His first was last year. Najib said under the 1Malaysia concept, one has to move from merely being tolerant, to total acceptance of the diversity and then celebrating it as a source of strength.

Najib said that for Malaysia to become a developed and successful country, its struggle should be inclusive and based on the ties that bind the people, with the society having confidence that Malaysia would become a developed and successful country. Najib said the government had also allocated RM6.9 million for Batu Caves' beautification and landscaping programme as well as for the construction of a new block for SJK(T) Batu Caves, which was completed last month. At the same time, the prime minister said, the government, in collaboration with the MIC and non-governmental organisations, would continue with programmes aimed at helping the Indian community. Najib also witnessed the signing of a memorandum of understanding between the Sri Maha Mariamman Temple management and Damodar Ropeways and Constructions Pty Ltd to set up a 250-metre cable car service in Batu Caves. The RM10 million project, expected to start soon and to be completed next year, is expected to benefit people with disabilities as well as tourists, as it will transport them right to the top of the cave without having to walk up the 272 steps.

Wednesday, January 19, 2011

Penang Thaipusam

In Penang, the 116-year-old silver chariot of Lord Muruga makes its way through Jalan Datuk Keramat to Jalan Air Terjun today as Hindus begin celebrating Thaipusam, and devotees as well as tourists break coconuts to mark the event.

Tuesday, January 18, 2011

Vacancy at Universiti Putra Malaysia (UPM)


Vacancy at Universiti Putra Malaysia (UPM)

Tarikh Tutup Permohonan : 21 Januari 2011


Untitled Document
pendaftar.upm.edu.my

1. ATENDAN KESIHATAN GRED U3
2. JURURAWAT GRED U41
3. JURURAWAT MASYARAKAT GRED U19
4. JURURAWAT PERGIGIAN GRED U29
5. OPERATOR LOJI GRED R3
6. PEGAWAI KEWANGAN GRED W41
7. PEGAWAI PENYELIDIK GRED Q41
8. PEGAWAI PENYELIDIK GRED Q43
9. PEGAWAI PENYELIDIK GRED Q47
10.PEGAWAI PERUBATAN GRED UD43
11.PEGAWAI SAINS GRED C41
12.PEGAWAI TADBIR GRED N41
13.PEKERJA AWAM GRED R1
14.PEMANDU KENDERAAN GRED R3
15.PEMBANTU AM PEJABAT GRED N1
16.PEMBANTU BELIA DAN SUKAN GRED S17
17.PEMBANTU PERPUSTAKAAN GRED S17
18.PEMBANTU PERTANIAN GRED G17
19.PEMBANTU TADBIR (PERKERANIAN/OPERASI) GRED N17
20.PEMBANTU VETERINAR GRED G17
21.PEMBANTU WARTAWAN/WARTAWAN GRED S17
22.PENGAWAL KESELAMATAN GRED KP11
23.PENOLONG AKAUNTAN GRED W27
24.PENOLONG PEGAWAI PERUBATAN GRED U29
25.PENOLONG PEGAWAI SAINS GRED C27
26.PENOLONG PEGAWAI VETERINAR GRED G27
27.PEREKA2 GRED B17
28.TUKANG K2 GRED R11