தாய் தந்தையர் என்றுமே நமது வாழ்க்கையில் முதன்மை நிலையில் வைத்து போற்றக்கூடியவர்கள் ஆவர். பெற்றோர்களிடமிருந்துதான் அன்பு உருவாக்கப்படுகிறது. எனவே ஒரு மனிதன் வாழ்க்கையில் எந்த நிலைக்குச் சென்றாலும் அவர்களை மறந்துவிடக்கூடாது.

Tuesday, January 11, 2011

நம்மில் பலருக்கு வாழ்நாள் கவலை

நம்மில் பலருக்கு வாழ்நாள் முழுவதும் ஒரு கவலை இருந்து கொண்டேதான் இருக்கிறது. அவர் எவ்வளவு செழிப்பாக வாழ்கிறார். அவரைப் போல நாம் இல்லையே என்று பிறரைப் பார்த்து கவலைப்படும் மனோபாவம். பணக்காரனை பார்த்து ஏழை இப்படி நினைக்கிறான். பிரச்சினைகளில் சிக்கித் தவிப்பவன் பிரச்சினைகள் ஏதுமின்றி மகிழ்ச்சியாய் உள்ளவனைப் பார்த்து கவலைப்படுகிறான். ஆரோக்கியமானவனைப் பார்த்து உடல் நலம் குன்றியவன் அவனைப் போல் நாம் ஆரோக்கியமாக இல்லையே என்று கவலைப்படுகிறான். கருப்பாக இருப்பவன் சிவப்பாய் இருப்பவனைப் பார்த்து நாம் அவரைப் போல சிவப்பாக இல்லையே என்று கவலைப்படுகிறான்.

No comments:

Post a Comment