தாய் தந்தையர் என்றுமே நமது வாழ்க்கையில் முதன்மை நிலையில் வைத்து போற்றக்கூடியவர்கள் ஆவர். பெற்றோர்களிடமிருந்துதான் அன்பு உருவாக்கப்படுகிறது. எனவே ஒரு மனிதன் வாழ்க்கையில் எந்த நிலைக்குச் சென்றாலும் அவர்களை மறந்துவிடக்கூடாது.

Friday, January 14, 2011

உனக்காய் ஒரு விடியல் …

கருகிப்போன கனவுப் பூக்களை
எண்ணி கவலைப்படாதே
ஒரு விருட்சத்தின் விதை
இன்னும் உனக்குள் இருக்கிறது…
இறந்து போன நிமிடங்களின்
முகவரிகள் நமக்கு தேவையில்லை
நிகழ்காலம் நம் கையில் இருக்கிறது
நம்பிக்கையில் இருக்கிறது…
காலத்தின் சுழற்சியில்
கதிரவனுக்கும் மரணமுண்டு
வாழ்க்கை சுழற்சியில்
இன்பம் துன்பம் இரண்டுமுண்டு..
இன்பத்தை இறுகப் பிடித்துக்கொள்
துன்பத்தை தொலைத்து விடு
வீழ்வது தோல்வியல்ல
ஒவ்வொரு வீழ்தலிலும்
உன் வெற்றி
நிச்சயிக்கப்படுகிறது…
எதையும் எங்கேயும் தேடாதே
எல்லாமே உன்னுள் இருக்கிறது
உனக்குள் இருக்கிறது…
உன்னை நீ செதுக்கு
உனக்குள் இருக்கும் நீ தெரிவாய்…
சருகுகள் கூட உரமாகி
சாதிக்கும் போது…
சரித்திரம் படைக்க பிறந்தவன் நீ
சாய்ந்து போகாதே…
இலட்சியங்களை உன்
விழிகளுக்குள் விதையாக்கி
இமைமூடி உறங்கும்போதும்
உன் கனவுகள் மட்டும்
விழித்திருக்கட்டும்…
நம்பிக்கையை மூச்சுக்காற்றாக்கி
உழைப்பை ஊன்றுகோலாக்கி
உறுதியோடு போராடு…
உனக்காய் ஓர் விடியல்
காத்திருக்கிறது…

No comments:

Post a Comment