தாய் தந்தையர் என்றுமே நமது வாழ்க்கையில் முதன்மை நிலையில் வைத்து போற்றக்கூடியவர்கள் ஆவர். பெற்றோர்களிடமிருந்துதான் அன்பு உருவாக்கப்படுகிறது. எனவே ஒரு மனிதன் வாழ்க்கையில் எந்த நிலைக்குச் சென்றாலும் அவர்களை மறந்துவிடக்கூடாது.

Tuesday, January 25, 2011

தெனாங் தொகுதியில் இந்தியர்களின் அமோக ஆதரவு - டத்தோ பழனிவேல்

தெனாங் சட்டமன்றத் தொகுதியில் தேசிய முன்னணிக்கு இந்திய வாக்காளர்களின் ஆதரவு அதிகரித்திருக்கிறது. இந்த இடைத்தேர்தலில் தேசிய முன்னணி வேட்பாளர் அமோக வெற்றியை பெறுவார் என்று ம.இ.கா. தேசியத் தலைவர் டத்தோ ஜி.பழனிவேல் தெரிவித்தார்.
நேற்று தெனாங் தொகுதியில் வாக்கு வேட்டையாடிய டத்தோ பழனிவேல் இவ்வாறு கூறினார்.
இந்தத் தொகுதியில் சுமார் 1700 இந்திய வாக்காளர்கள் இருக்கிறார்கள். அதில் 1400 பேர் ம.இ.கா. கிளைகளில் உறுப்பினர்களாக உள்ளார்கள். இவர்களுடைய வாக்குக்கள் சிதறாமல் தேசிய முன்னணிக்கு கிடைக்கும் என்று அவர் நம்பிக்கைக் தெரிவித்தார்.
வேட்புமனுத்தாக்கல் நாளன்று தெனாங் தொகுதிக்கு பிரதமர் வருகை தந்திருந்தார். அப்போது ஆயிரக்கணக்கான இந்தியர்கள் திரண்டு வந்து பிரதமருக்கு ஆதரவு தெரிவித்தனர். மேலும் இந்த தொகுதியில் இருக்கும் இந்திய சமூகத்தினரில் பெரும்பாலானோர் ஆதரவு தேசிய முன்னணிக்கு திரும்பி இருக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.
ம.இ.கா. தேர்தல் களப் பணியாளர்கள், தேசிய முன்னணியின் வெற்றிக்கு சூறாவளியாக சுழன்று வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். தொகுதி முழுவதும் அவர்கள் வாக்கு வேட்டையாடி வருகிறார்கள். ம.இ.கா. தலைவர்கள் முழு மூச்சாக களம் இறங்கி வெற்றிக்கு பாடுபட்டு கொண்டிருக்கிறார்கள் என்று டத்தோ பழனிவேல் கூறினார்.

No comments:

Post a Comment