தாய் தந்தையர் என்றுமே நமது வாழ்க்கையில் முதன்மை நிலையில் வைத்து போற்றக்கூடியவர்கள் ஆவர். பெற்றோர்களிடமிருந்துதான் அன்பு உருவாக்கப்படுகிறது. எனவே ஒரு மனிதன் வாழ்க்கையில் எந்த நிலைக்குச் சென்றாலும் அவர்களை மறந்துவிடக்கூடாது.

Friday, January 28, 2011

இண்டர்லோக் நாவல் சில திருத்தங்களோடு நீடிக்கும் - டான்ஸ்ரீ மொகிதீன் யாசின்

சர்ச்சைக்குரிய இண்டர்லோக்  நாவல் ஜந்தாம் படிவ மாணவர்களின் மலாய் இலக்கிய பாடமாக நீடிக்கும் என்றும் ஆனால் இந்தியர்களைப் புண்படுத்துவதாக கருதப்படும் வாசகங்கள் அகற்றப்படும் என்றும் துணை பிரதமர் டான்ஸ்ரீ  மொகிதீன் யாசின் கூறியுள்ளார்.

இதுவே இந்தப் பிரச்சினைக்கு சிறந்த தீர்வாக அமையும். திருத்தங்களை மேற்கொள்வதற்கு சுயேச்சைக் குழு ஒன்று அமைக்கப்படும். அந்தக் குழு திருத்தங்கள் குறித்து ஆராய்ந்து கல்வியமைச்சுக்கு பரிந்துரை செய்யும் என்று கல்வி அமைச்சருமான மொகிதீன் யாசின் ஓர் அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment